1. அணிலாடும் முன்றில்- உறவுகளையும் உறவுப் பிணைப்புகளையும் பற்றிய ஒரு அழகிய படைப்பு,நா.முத்துக்குமாரின் அழகிய தமிழ் நடையில், படிப்பவரை நிச்சயம் கவரும்.
2.துணையெழுத்து - எஸ்.ராமகிருஷ்ணனின் வாழ்வியல் அனுபவ கட்டுரைகள், அவருக்கு மட்டுமே உரித்தான சிலிர்க்க வைக்கும் மொழி நடையில், இந்த புத்தகத்தை படிப்பதே ஒரு சிறந்த அனுபவம்.
3.வட்டியும் முதலும் - ராஜு முருகனின் இயல்பான நேரடியான வார்த்தைகளில் மக்களின் யதார்த்த வாழ்வை கண் முன் நிறுத்தும் நூல்.நேரடியான வாழ்வனுபவத்தை குறைவின்றி கொடுக்கும்.
4. கற்றதும் பெற்றதும் - சுஜாதாவின் விஞ்ஞானப் பார்வையில் அமைந்த படைப்பு, அன்றாட நிகழ்வுகளையும் அவர் அறிந்து கொண்ட புதியனவற்றையும் எளிய நடையில் விவரிக்கும் புத்தகம்
5.ஊருக்கு நல்லது சொல்வேன் - தமிழருவி மணியனின் தெள்ளிய கருத்து விளக்கங்களுடன் சமூக அக்கறை கொண்ட கட்டுரைகள்,வற்புறுத்தலான தொனியுடன் நம்மை சிந்திக்க வைக்கிறது.
6.கிமு கிபி - மதனின் வரலாற்றுப் பார்வையும் சமூக நோக்கியலும் கலந்த எழுத்துக்கள் படிப்பவர் ஒவ்வொருவரையும் கவர்ந்திழுக்கும்,நிகழ்வுகளயும் பிண்ணனிகளையும் ஆராய்கிறது இப்புத்தகம்.
7.சாட்சி மொழி - ஜெயமோகன் தன் கருத்தியலையும், தன் விமர்சனங்களையும், தன் மீதான விமர்சனங்களுக்கான பதில்களையும் ஆணித்தரமாக விளக்கும் புத்தகம்,இதை வாசித்தால் அவர் கொணடாடப்படுவதற்காண காரணம் புரியம்.
8.ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரண சாசனம் -சி.மகேந்திரனின் சூழலியல் கட்டுரைகள் நம்மால் கவனிக்கப் படாத பெருங் கேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த ஒரு உன்னத முயற்சி
9.ஓடும் நதியின் ஓசை - இறையன்புவின் வாழ்வியியல் கட்டுரைகள், புத்துலகிற்கு இளம் தலைமுறையை வழிகாட்டி அழைத்துச் செல்லும் விவேகமிக்க கருத்துகள் நிறைந்த புத்தகம்.
10.வீழ்வேனென்று நினைத்தாயோ? - உலகம் கவனிக்க மறுத்த மனித இனம் அவமானப் பட வேண்டிய மனிதப் பேரவலத்தை சி.மகேந்திரன் தன் எழுத்துக்களில் பதிவு செய்திருக்கிறார்
2.துணையெழுத்து - எஸ்.ராமகிருஷ்ணனின் வாழ்வியல் அனுபவ கட்டுரைகள், அவருக்கு மட்டுமே உரித்தான சிலிர்க்க வைக்கும் மொழி நடையில், இந்த புத்தகத்தை படிப்பதே ஒரு சிறந்த அனுபவம்.
3.வட்டியும் முதலும் - ராஜு முருகனின் இயல்பான நேரடியான வார்த்தைகளில் மக்களின் யதார்த்த வாழ்வை கண் முன் நிறுத்தும் நூல்.நேரடியான வாழ்வனுபவத்தை குறைவின்றி கொடுக்கும்.
4. கற்றதும் பெற்றதும் - சுஜாதாவின் விஞ்ஞானப் பார்வையில் அமைந்த படைப்பு, அன்றாட நிகழ்வுகளையும் அவர் அறிந்து கொண்ட புதியனவற்றையும் எளிய நடையில் விவரிக்கும் புத்தகம்
5.ஊருக்கு நல்லது சொல்வேன் - தமிழருவி மணியனின் தெள்ளிய கருத்து விளக்கங்களுடன் சமூக அக்கறை கொண்ட கட்டுரைகள்,வற்புறுத்தலான தொனியுடன் நம்மை சிந்திக்க வைக்கிறது.
6.கிமு கிபி - மதனின் வரலாற்றுப் பார்வையும் சமூக நோக்கியலும் கலந்த எழுத்துக்கள் படிப்பவர் ஒவ்வொருவரையும் கவர்ந்திழுக்கும்,நிகழ்வுகளயும் பிண்ணனிகளையும் ஆராய்கிறது இப்புத்தகம்.
7.சாட்சி மொழி - ஜெயமோகன் தன் கருத்தியலையும், தன் விமர்சனங்களையும், தன் மீதான விமர்சனங்களுக்கான பதில்களையும் ஆணித்தரமாக விளக்கும் புத்தகம்,இதை வாசித்தால் அவர் கொணடாடப்படுவதற்காண காரணம் புரியம்.
8.ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரண சாசனம் -சி.மகேந்திரனின் சூழலியல் கட்டுரைகள் நம்மால் கவனிக்கப் படாத பெருங் கேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த ஒரு உன்னத முயற்சி
9.ஓடும் நதியின் ஓசை - இறையன்புவின் வாழ்வியியல் கட்டுரைகள், புத்துலகிற்கு இளம் தலைமுறையை வழிகாட்டி அழைத்துச் செல்லும் விவேகமிக்க கருத்துகள் நிறைந்த புத்தகம்.
10.வீழ்வேனென்று நினைத்தாயோ? - உலகம் கவனிக்க மறுத்த மனித இனம் அவமானப் பட வேண்டிய மனிதப் பேரவலத்தை சி.மகேந்திரன் தன் எழுத்துக்களில் பதிவு செய்திருக்கிறார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக