வியாழன், 17 ஏப்ரல், 2014

இட்லி சட்னி சாம்பார் மற்றும் அரசியல்



இட்லி சட்னி சாம்பார் மற்றும் அரசியல்

தமிழ்நாட்டின் அரசியல் நாடு முழுவதும் உன்னிப்பாக கவனிக்கப் படுவது, நாட்டின் செல்வாக்கு மிக்க கட்சிகள் என்று கருதப்படும் எந்தக் கட்சியும் இங்கு முன்னணியில் இல்லை. தமிழகத்தைப் பொருத்தவரை செல்வாக்கான கட்சிகள் என்றால் அது அதிமுக வும் திமுக வும் தான். இந்த இரு கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே தங்களை தேசிய கட்சிகள் என்று கூறிக்கொள்ளும் மற்ற கட்சிகள் போட்டியிடும்.ஆனால் இந்த தேர்தலில் இந்த இரு கட்சிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன. தேசிய கட்சிகள் ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கின்றன. தம் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும், தமக்காக போராடும் கட்சிகள் என்று தமிழன் நம்புவது திராவிட கட்சிகளைத்தான். ‘ என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே ‘ என்று அம்மாவும் கலைஞரும், வைகோ வும் விஜயகாந்தும் விளிக்கும் போது புளங்காகிதப் பட்டுப் போகிறான் தமிழன்.திராவிட அரசியல் இட்லியும் சாம்பாரும் போல தமிழர் வாழ்வியலில் கலந்து விட்ட ஒன்று. எத்தனை தலைமுறைகள் ஆனாலும் தமிழகத்தில் திரவிட அரசியலின் செல்வாக்கை குறைக்க முடியாது.   

அரசியல்



இன்று விகடன் இணைய தளத்தில் ஒரு நகைச்சுவை படித்தேன். அதாவது நடிகர் கார்த்திக் கட்சி உடைந்ததாம். தமிழ் நாட்டில் பல பேருக்கு அவரது கட்சி பெயரே தெரியாது என்றாலும் மனம் தளராமல் காங்கிரஸ் கட்சியுடன் அவர் கூட்டணி சேர்ந்ததிலேயே அவரது கட்சியின் பலம் உங்களுக்கு புரிந்திருக்கும். காங்கிரஸ் கட்சித் தலைவர்களே பிரச்சாரம் செய்யத் தயங்கும் நேரத்தில் அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்து பிரச்சாரம் செய்வதிலேயே அவரது அரசியல் ஞானமும், தொலை நோக்குப் பார்வையும் அனைவருக்கும் புரிந்தது. தான் நடத்திவரும் நாடாளும் மக்கள் கட்சி என்ற மக்கள் செல்வாக்கு மிக்க கட்சியிலிருந்து தானும் விலகுவதாக கார்த்திக் அறிவிக்கவிருக்கும் அந்த அரிய நாளுக்காக காத்திருக்கிறேன். 


திங்கள், 7 ஏப்ரல், 2014

கேப்டனுக்கு ஒரு அடிமை சிக்கிவிட்டது மக்களே!!

தமிழக பாஜக வின் மற்றுமொருசொதப்பல், நீலகிரி தொகுதி வேட்பாளர் சான்றுகளை சரியாக இணைக்காமல் விட்டதால் அவரது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது .
மிக மோசமான வகையில் தேர்தலை சந்திக்கிறது தமிழக பாஜக,மோடி மந்திரம் பலித்தால்,கூட்டணி கட்சிகள் உதவினால் மட்டுமே,இவர்களது மரியாதையை காப்பாற்ற முடியும். அதிமுக மற்றும் திமுக வின் அதிரடி அரசியலுக்கு முன்னால் தமிழக பாஜக ஒரு கத்துக்குட்டிதான்.அடிப்படையான முன்னேற்பாடுகள் கூட இல்லாமல் எந்த நம்பிக்கையில் இவர்கள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என்பது விந்தை.எப்படியோ கேப்டனுக்கு ஒரு அடிமை சிக்கிவிட்டது மக்களே!!இந்த கட்சியை கூட்டணியில் சேர்த்து,சட்டமன்றத் தேர்தலில் நிற்கலாம்.