வியாழன், 17 ஏப்ரல், 2014

இட்லி சட்னி சாம்பார் மற்றும் அரசியல்



இட்லி சட்னி சாம்பார் மற்றும் அரசியல்

தமிழ்நாட்டின் அரசியல் நாடு முழுவதும் உன்னிப்பாக கவனிக்கப் படுவது, நாட்டின் செல்வாக்கு மிக்க கட்சிகள் என்று கருதப்படும் எந்தக் கட்சியும் இங்கு முன்னணியில் இல்லை. தமிழகத்தைப் பொருத்தவரை செல்வாக்கான கட்சிகள் என்றால் அது அதிமுக வும் திமுக வும் தான். இந்த இரு கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே தங்களை தேசிய கட்சிகள் என்று கூறிக்கொள்ளும் மற்ற கட்சிகள் போட்டியிடும்.ஆனால் இந்த தேர்தலில் இந்த இரு கட்சிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன. தேசிய கட்சிகள் ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கின்றன. தம் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும், தமக்காக போராடும் கட்சிகள் என்று தமிழன் நம்புவது திராவிட கட்சிகளைத்தான். ‘ என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே ‘ என்று அம்மாவும் கலைஞரும், வைகோ வும் விஜயகாந்தும் விளிக்கும் போது புளங்காகிதப் பட்டுப் போகிறான் தமிழன்.திராவிட அரசியல் இட்லியும் சாம்பாரும் போல தமிழர் வாழ்வியலில் கலந்து விட்ட ஒன்று. எத்தனை தலைமுறைகள் ஆனாலும் தமிழகத்தில் திரவிட அரசியலின் செல்வாக்கை குறைக்க முடியாது.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக